பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தயாரிப்பாளர் வாசு பக்நானியும், நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2002ம் ஆண்டு, ''ஓம் ஜெய் ஜெகதீஷ்'' என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின்னர் இவர்கள் இணைந்து படம் பண்ணவேயில்லை. இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகின்றனர். புதியவர் அக்ஷ்ய் பூரி இயக்கும் படத்தில், அபிஷேக் ஹீரோவாக நடிக்க, வாசு பக்நானி தயாரிக்கிறார். இப்படம் அபிஷேக்கின் தந்தை அமிதாப் நடித்த ''டூ அவுர் டூ பான்ச்'' படத்தின் ரீ-மேக் ஆகும். ஆனால் தற்போது உருவாகும் படத்தின் கதை புதியது என்றும், இதில் இரண்டு ஹீரோக்கள் என்றும், ஒரு ஹீரோ அபிஷேக், மற்றொரு ஹீரோவுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் அக்ஷ்ய்.
அபிஷேக் கூறுகையில், புதியவர் அக்ஷ்ய் படத்தில் நடிக்கிறேன். வாசு தான் தயாரிக்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அநேகமாக இப்படத்தில் அபிஷேக் உடன் இன்னொரு ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிப்பார் என தெரிகிறது.