டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் ஆனந்திக்கு நன்மை ஏற்படவில்லை. அதன் பிறகு, பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் நடித்தார். கயல் படமும் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை என்றாலும் ஆனந்தியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு ஆனந்தியின் அசரடிக்கும் கண் அவருக்கு பட வாய்ப்புகளை தேடி வரச்செய்கிறது. இதனால் தற்போது இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
டார்லிங், பென்சில் படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்திதான் நாயகி. இந்தப்படம் தவிர, நய்யாண்டி சற்குணம் இயக்கும் சண்டி வீரன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் ஆனந்தி. தஞ்சாவூர் அருகிலுள்ள வடுவூர் ஏரியில் சமீபத்தில் சண்டி வீரன் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின்போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதாம். முதலில் இதை கவனிக்காததால் தைரியமாக நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, தன் பக்கத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதை உணர்ந்ததும் அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். பின்னர், அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் இருப்பதெல்லாம் ரொம்பவும் சகஜம் என்றும், அதெல்லாம் விஷம் இல்லாத தண்ணீர் பாம்புகள் என்று சொன்னதை அடுத்து தைரியமாக நடித்து முடித்திருக்கிறார் ஆனந்தி.