துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இயக்குனர் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படத்துக்கு திரும்புகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரபுதேவா மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார்.
சிங் இஸ் பிளிங் என்பது அடுத்த படத்தின் டைட்டில் இதிலும் அக்ஷய்குமார்தான் ஹீரோ. கீர்த்தி சனம் ஹீரோயின். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, கோவா, மும்பை, பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. மேற்கண்ட இடங்களுக்கு சென்று லொக்கேஷன் தேர்வு செய்து விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் பிரபல தமிழ் க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரின் வெல்வெட் குற்றங்கள் நாவலை பிரபுதேவா இந்தியில் சினிமாவாக எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெல்வெட் குற்றங்கள் சமீபத்தில் ராஜேஷ்குமார் ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய நாவல். விமானக் கடத்தல் தொடர்பான பரபரப்பான நாவல். இந்த நாவலை படமாக்குவது குறித்து பிரபுதேவா ராஜேஷ்குமாருடன் பேசி வருகிறார். பிரபுதேவா அடுத்து இயக்கும் படமான சிங் இஸ் பிளிங், ராஜேஷ்குமார் கதையா, அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை.
ராஜேஷ்குமார் எழுதிய அகராதி, சிறுவாணி நாவல்கள் ஏற்கெனவே திரைப்படமாகியிருக்கிறது. தற்போது 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் படமாகி வருகிறது. சரத்குமாரின் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரஜேஷ்குமார்.