ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அக்ஷய் குமார், தன்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் என்று அழைப்பதை, என் மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. என்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைத்தால் போதும். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி எனக்கு வேண்டாம். படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே தான் நடித்து வருகிறேன். ஆண்டிற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும், ஆனால், அத்தகைய படங்கள், எனது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக மற்றும் நல்ல கருத்துகளை சொல்பவையாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.