ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் சாதிக்க வேண்டுமென்றால், தென்னிந்திய திரையுலகில், நிறைய புதுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.
பேபி படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியது பற்றியும், மற்றும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் பாகுபாலி படம் குறித்து, ராணா டகுபதி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பேபி படம், தங்களுக்கு பாலிவுட்டில் சிறந்த அறிமுகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
நான் தான் நடிக்கும் எந்தவொரு படத்தையும் எனது அறிமுகப்படம் என்றே நினைப்பேன். பேபி படத்தையும் நான் அவ்வாறே நினைத்து நடித்தேன். இனியும் நடிப்பேன்
நீங்களும் அக்ஷய் குமாரும் சண்டை பயிற்சி பெற்றவர்கள். அக்ஷய் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து..
நான் திரைத்துறையில் முன்னணி இடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே, சண்டை பயிற்சியை பெற்றேன். பேபி படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்ததால், அந்த கேரக்டரில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்படக்குழு நினைத்ததன் அடிப்படையிலேயே, நான் அப்படத்திற்கு தேர்வு ஆனேன். அக்ஷய் குமாருடன் இணைந்து நான் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். அக்ஷய் திறமையான நடிகர். நான், அக்ஷய் குமார் மற்றும் அனுபம், மூவரும், பாலைவனத்திலேயே ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டு, பல்வேறு சண்டைக்காட்சிகளில் நடித்தோம். அப்போதே, பல நேரங்களில், அக்ஷய் குமார் எனக்கு உதவினார். எங்கள் இருவருக்குமிடையில், ஒரு உற்சாக இணைப்பு இருந்தது என்றால் அது மிகையல்ல.
பாலிவுட்டிலும் படங்களை தேர்ந்தெடுத்து தான் நடிப்பீர்களா?
நான் விரும்பும் கதைகளில் மட்டுமே நான் நடித்து வருகிறேன். இதில் பல படங்கள் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் வசூல்ரீதியாக தோல்வியை தழுவுகின்றன. அந்த தோல்விப்படங்களிலிருந்து எத்தகைய தவறுகளை நான் செய்திருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்கிறேன். ஆண்டிற்கு 3 படங்கள். 3 படங்களும் வெவ்வேறு மொழிப்படங்களாக இருக்க வேண்டும் என்று நான் திட்டம் வைத்துள்ளேன். ஆனால், பாகுபாலி போன்ற படங்களை எடுப்பதற்கே, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் ரசிகர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு, அனைத்து மொழிகளிலும் படம் பண்ண வேண்டும் என்பதே எனது நீண்டநாளைய விருப்பம்.
பாகுபாலி படம் பற்றி...
பாகுபாலி படம், என்னை முழுவதும் மாற்றியமைத்திருக்கிறது. இந்த படத்திற்காக, தற்போது வரை 287 நாட்கள் அளவிலான சூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளேன். இன்னும் 200 நாட்கள் சூட்டிங் இருப்பதாக, படத்தின் இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார். இந்த படத்தில், இரண்டு கதைகள் உள்ளன. முதல் பகுதிக்கான சூட்டிங், 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. 2ம் பகுதிக்கான சூட்டிங்கும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாகம், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில், அதிக பட்ஜெட்டில், இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பாலிவுட்டில், சோலோ படத்தில் நடிப்பீர்களா?
நிச்சயமாக. அந்த மாதிரியான படங்களையே நான் மிகவும் விரும்புகிறேன். மல்டி ஸ்டார் படமோ அல்லது சோலா ஹீரோ படமோ எதுவாக இருந்தாலும், முதலில் எனக்கு கதை பிடிக்க வேண்டும். அந்த கதை, ரசிகர்களை திருப்திபடுத்துமா என்பது குறித்து ஆராய்ந்த பிறகு, தான் படத்தில் நடிக்க துவங்குவேன்.
பாலிவுட் - தென்னிந்திய திரையுலகம் எவ்வாறு வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
தென்னிந்திய திரையுலகில், ஷங்கர் மற்றும் ராஜமெளலி ஈடு இணையற்ற இயக்குநர்களாக விளங்குகிறார்கள். மகி, ஐ,. ரோபாட் உள்ளிட்ட படங்கள் தென்னிந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக தேசிய அளவிலும் பெரும்பாராட்டுகளை பெற்றுள்ளன. தென்னிந்திய திரையுலகில், ஷங்கர், ராஜமெளலி போன்ற சிறந்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிட முடிகிறது. ஆனால், பாலிவுட்டிலோ அப்படி அல்ல. பாலிவுட்டில் சாதிக்க வேண்டுமென்றால், தென்னிந்திய திரையுலகில், நிறைய புதுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடின உழைப்புடன் விடாமுயற்சி இருந்தால், எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.