நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
குடியரசு தினத்தன்று, நடிகர் அமிதாப் பச்சன், கோல்கட்டாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், தேசிய கீதம் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுளள ஷமிதாப் படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபலத்தும் பொருட்டு, ஷமிதாப் டீம், பல்வேறு நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக, குடியரசு தினமான நாளை (ஜனவரி 26ம் தேதி), கோல்கட்டாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், அமிதாப் பச்சன் தேசிய கீதம் பாட உள்ளார். இதனை வீடியோ எடுத்து வெளியிட உள்ளனர். இதுகுறித்து இயக்குநர் பால்கி கூறியதாவது, ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், தேசிய கீதம் பாடும் வகையிலான படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் தேசிய கீதம் பாட உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.