ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருகாலத்தில் ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலித்து வந்தனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். கரீனா, நடிகர் சைப் அலிகானை காதிலித்து மணந்து கொண்டார். அதன்பின்னர் ஷாகித்தும், கரீனாவும் இணைந்து எந்தபடமும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந்து ஒருபடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.
அபிஷேக் சௌபே, 'உத்தா பஞ்சா' என்ற படத்தை எடுக்க உள்ளார். இதில் ஷாகித் கபூரும் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க ஆலியாபட்டிடம் கேட்டுள்ளனர். அதேசமயம் கரீனா கபூரிடமும் இப்படத்தில் நடிக்க அணுகியுள்ளனர்.
சமீபத்தில் அபிஷேக், கரீனாவை சந்தித்து உத்தா பஞ்சாப் கதையை சொல்லியுள்ளார், மேலும் இப்படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான ரோல் இருப்பதாகவும் கூறியுள்ளார். கரீனாவுக்கும் இந்த கதை பிடித்துள்ளதாம், ஆனால் இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் இன்னும் உறுதி சொல்லவில்லையாம், இருந்தாலும் கண்டிப்பாக அவர் நடிப்பார் என்கிறார்கள். ஒருவேளை கரீனா சம்மதித்தால், மீண்டும் ஷாகித் கபூரும்-கரீனா கபூரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.