தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அபிஷேக் செளபே இயக்கத்தில், உத்டா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமானார். செளபே, இந்தாண்டு இறுதிக்குள்ளாக, படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஷாகித்தின் தற்போதைய கால்ஷீட்டை பார்க்கும்போது, அடுத்த ஆண்டு இறுதி்க்குள் கூட, படப்பிடிப்பை துவக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், ஷாகித் கபூர், தற்போது ஷந்தார் படத்தின் படப்படிப்பிற்காக போலந்து சென்றுள்ளார். ஷந்தார் பட இயக்குனர் விகாஷ் பால், சூட்டிங்கை, ஒரே செட்டியூலேயே முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்-டி.கே இயக்கும் பார்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங், ஜனவரியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தின் சூட்டிங்கை, பார்சி படத்தின் சூட்டிங்கிற்கு பிறகே நடத்த முடியும் என்ற இக்கட்டான நிலை, அபிஷேக் செளபேவிற்கு ஏற்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தில், ஷாகித் கபூரை நடிக்க வைக்கலாமா? அல்லது வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாமா? என்ற சிந்தனையில், தற்போது செளபே மூழ்கியுள்ளார்.....