ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் போலீசால் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் இருவருக்கும் அன்றைய தினமே அந்தேரி கோர்ட் ஜாமீன் வழங்கியது.
நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் இணைந்து பெண் ஒருவருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் சானா கானும், இஸ்மாயிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதியன்று நடிகர் சாகில் கானுக்கும், இஸ்மாயிலுக்கும் இடையே ஜிம்மில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாகில் அளித்த புகாரின் பேரிலும் இஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலையில் கைது செய்யப்பட்ட சானா கானும், அவரது காதலரும் பிற்பகலில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.