வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ராம்லீலா படத்திற்கு பிறகு, சஞ்சய் லீலா பன்சாலி, மீண்டும் ரன்வீர் சிங்கை வைத்து ''பஜிராவ் மஸ்தானி'' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தப்படத்திற்காக ரன்வீர் சிங் குர்கானுக்கு குடிபெயர இருக்கிறார். இதுப்பற்றி விசாரித்ததில், சமீபத்தில் அவர் இந்தப்படத்திற்காக மொட்டை அடித்து இருப்பது போன்ற தோற்றம் வெளியாகின. இதனால் இப்படத்தில் ரன்வீர் சிங் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரன்வீர் சிங்கின் தோற்றம் வெளியானதால் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனால் இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும், படம்பற்றிய விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் குர்கானில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பை தனியாக வாடகைக்கு பிடித்துள்ளார் இயக்குநர். இனி ரன்வீர் சிங் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே படம் முடியும் வரை இருப்பார் என படக்குழு தெரிவிக்கிறது.