தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்''. இப்படம் தெலுங்கில் கரண்ட் தீகா என்ற பெயரில் ரீ-மேக்காகிறது. இதில், மஞ்சு மனோஜ் ஹீரோவாகவும், ராகுல் ப்ரீத்தி சிங் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். தமிழில் கல்யாணி டீச்சர் வேடமான பிந்து மாதவி ரோலில், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். சன்னிக்கு தெலுங்கில் இதுதான் முதல்படம். இப்படத்தில் இவர் வந்து போவது குறைந்த காட்சிகள் என்றாலும், இவருக்கு முக்கால் கோடி சம்பளமாக கொடுத்துள்ளனர். மேலும் இப்படத்தில், சன்னிக்கு ஒரு பாடல் காட்சியும் உள்ளது. அதனால் இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான நாகேஸ்வர் ரெட்டி சன்னி லியோனை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சன்னி லியோன் தனது சினிமா தொழிலில் மிகவும் பக்தியுடையவர், அதைவிட முக்கியம் அவர் நேரம் தவறாத பங்சுவாலிட்டியான நடிகை. படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்தில் சரியாக வந்துவிடுவார். சினிமாவில் அவர் காட்டும் பக்தி மற்றும் ஈடுபாடு எங்களை ஆச்சர்யப்படுத்தியது என்று கூறியுள்ளார்.