அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாக்ஸ் கிரிக்கெட் லீக்(பிசிஎல்.,) எனும் கிரிக்கெட் விளையாட்டு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாய் நடத்த இருக்கிறார். இதில் 150 சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மைதானத்தில் நடப்பதை மட்டுமல்லாமல், லாக்கர் ரூமில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும் கலந்துகட்டி இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த இருக்கின்றனர். சுமார் 8 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றனர்.
''இந்த விளையாட்டில் பெண்களும், ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்கள். டெலிவிஷன்களில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இந்த கிரிக்கெட் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி இருக்கும்'' என்று கூறுகிறார் ஏக்தா கபூர்.