ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களே எந்தவித தயக்கமும் இன்றி அயிட்டம் பாடல்களில் நடனமாடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா மட்டும் இதுவரை பல வாய்ப்புகள் தேடிச்சென்றபோதும் அதை ஏற்கவில்லை. காரணம், அயிட்டம் பாடல் என்கிறபோது அதிக ஆடைகுறைப்பு செய்யச்சொல்வார்கள் என்பதால் அந்த வாய்ப்புகளை கட்டாயமாக தவிர்த்து வந்தார்.
ஆனால், இப்போது ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா நடிக்கும் தில் தடக்னே டு என்ற படத்தில் முதன்முறையாக ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். காரணம், இந்த படத்தை இயக்குவது ஜோயா அக்தர் என்ற பெண் இயக்குனராம். அவரது படங்களில் ஆபாசத்துக்கு எப்போதுமே தடைதானாம். அதனால்தான் தன்னை அளவுக்கதிகமாக தோலுரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நடித்தாராம் அனுஷ்கா சர்மா.
அவரது நம்பிக்கையை வீணடிக்காத வகையில், ஜோயா அக்தரும் அவரை பக்கா டீசன்டாகவே உடையணிய வைத்து ஆட வைத்திருக்கிறாராம். மேலும், அதே பாடலில் படத்தின் ஹீரோ ரன்வீர்சிங், ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஆகியோரும்கூட அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம். இந்த வாய்ப்பினை பெருமையாக கருதும் அனுஷ்கா சர்மா, இந்த தில் தடக்னே டு என திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.