பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகர்கள் பலர் அவர்களின் நவராத்தி அனுபவங்களை அங்கே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஸ்நேகா வாக் : நவராத்திரி, உண்மையிலேயே நமக்கு சிறப்பானதாகும். என் அம்மா வீட்டில் தேவியை ஸ்தாபித்து பூஜை செய்வார். நான் அவரைப் போன்று விரதம் இருந்ததில்லை. ஆனால் நான் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருப்பேன். பூஜைகளுக்கு நேரம் ஒதுக்க விரும்புகிறேன். கோரா கேந்திரா கோவிலுக்கு செல்ல நினைக்கிறேன். அவ்வாறு போகும் போது என் சகோதரிக்காக சானியா சோலி வாங்கி வர நினைக்கிறேன்.
டீனா தத்தா : என்னை பொறுத்த வரை நவராத்தி என்றாலே துர்க்கா பூஜை தான். புது ஆடைகள் உடுத்தி, துர்க்கா பூஜையின் போது பெரும்பாலான நேரத்தை என் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் செலவிடுவேன். இந்த ஆண்டும் நான் கொல்கட்டா செல்ல நினைத்துள்ளேன். துர்க்கா பூஜையின் போது செல்வதற்கான சிறந்த இடம் கோல்கட்டா. பக்தியுடன் பிரசாதமும் பகிர்ந்து கொள்வது சந்தோஷமான அனுபவம். அஷ்டமியின் போது சாந்தி பூஜையிலும் நான் கலந்து கொள்வது வழக்கம்.
ரூபல் தியாகி : அதிக நாள் கொண்டாடும் உற்சாகமான பண்டிகை என்பதால் நவராத்திரி சிறப்பான பண்டிகை. உற்சாகத்துடன் வழிபாடும் கலந்து ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. நான் வீட்டில் சிறிய அளவிலேயே பூஜை செய்வேன். ஆனால் தென்னிந்தியாவைப் போன்று விரிவாக பூஜை நடத்த எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு விரதத்தில் நம்பிக்கை இல்லை. தினமும் 13 முதல் 14 மணி நேரம் வரை சூட்டிங் இருப்பதால் டாண்டியாவிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் கடவுள் அருளால் ஓரளவு சமாளித்துக் கொண்டு 2 நாட்கள் மட்டும் டாண்டியாவிற்கு கண்டிப்பாக செல்வேன். டிசைனராக இருக்கும் எனது நண்பர் மூலம் ஏற்கனவே அழகான குஜராத்தி ஸ்டைல் லெகங்கா வாங்கி விட்டேன். கொண்டாட்டத்திற்கு அது சரியாக இருக்கும்.
ஹிம்மான்சூ அசோக் மல்கோத்ரா : அளவில்லா உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் அள்ளித்தரும் பண்டிகை நவராத்திரி.சுவையான உணவுகளுடன் கொண்டாடும் அற்பதுமான பண்டிகை. நடனம், குறிப்பாக மும்பை மற்றும் குஜராத்தில் டாண்டியாவிலும் கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள். எதிர்பாராத விதமாக நான் டில்லியில் சூட்டிங்கில் இருப்பதால் இந்த ஆண்டு என்னால் மும்பையில் இருக்கு முடியவில்லை. நான் விரதம் இருப்பதில்லை. ஆனால் என் அம்மா 9 நாட்களும் விரதம் இருப்பார். எங்களுக்கு அவர் விதித்திருக்கும் ஒரே கட்டுப்பாடு நவராத்திரி சமயத்தில் அசைவம் சாப்பிட கூடாது என்பது மட்டும் தான். அதனால் அம்மா என்ன சொல்கிறாரோ அதை செய்கிறோம்.
அர்ஜூன் பிஜ்லானி : நவராத்திரி பண்டிகை எனக்கு மிகவும் முக்கியமானதாகும். நானும் என் மனைவியும் நவராத்திரியின் 9 நாட்களில் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்றுவிட்டு வருவோம். எல்லா வருடங்களைப் போலவும் இந்த ஆண்டும் விதிமுறைகளை கடைபிடித்து அசைவம் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன். மேலும் குடும்பத்துடன் கோயிலுக்கும் செல்ல உள்ளேன். எனது குடும்பத்துடன் நவராத்திரியை கொண்டாடுகிறேன். விரதம் இருக்க மாட்டேன். ஆனால் 9 நாட்களும் அசைவம் சாப்பிட மாட்டேன். நவராத்திரிக்கு முன் வீட்டில் பெட்ஷீட் முதல் அனைத்தையும் மாற்றி சுத்தம் செய்தோம். என் குடும்பத்தினர்களுக்காக ஆடைகள் வாங்கி உள்ளேன்.
அன்கித் கீரா : நவராத்திரியின் 9 நாட்களும் எனக்கு சிறப்பு தான். எனது இடத்தை சுத்தம் செய்வேன். 9 நாட்களும் விரதம் இருக்க மாட்டேன். ஆனால் இரண்டாவது மற்றும் கடைசி நாட்கள் மட்டும் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என முயற்சிப்பேன். என் வீட்டில் உள்ள பூஜை அறையை மலர்களால் அலங்கரிப்பேன். பொதுவாக நவராத்திரியின் 9 நாட்களும் ஹேர் கட் செய்யவோ ஷேவ் செய்யவோ மாட்டோம். ஆனால் எனது தொழில் காரணமாக அவைகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு ஒரு முறையாவது மகாலட்சுமி கோயிலுக்கு செல்ல வேண்டும் என நினைத்துள்ளேன். நவராத்திரியின் 9 நாட்களும் நான் அசைவம் சாப்பிட மாட்டேன். இந்த ஆண்டு சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் நவராத்திரியை வீட்டில் கொண்டாட முடியாது.