தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படத்தின் கதையில் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் அக்ஷை கூறி உள்ளாராம். கதையில் அக்ஷையின் தலையீடு அதிகம் உள்ளதால் பட நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வந்திருக்கும் அக்ஷையிடம் இந்த ஒரு படம் தான் கைவசம் உள்ளதாம். இருந்தாலும் கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பட அதிபர்களிடம் அக்ஷை பேசி வருகிறாராம். இதனால் இப்படத்தை அவரை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக இர்பானை புக் செய்ய பட நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.