தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் 3வது சீசன் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. இது பற்றிய அமீர்கான் தனது டுவிட்டர் பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அமீர்கான் கூறியதாவது, அக்டோபர் 5ம் தேதி சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்க உள்ளது. இதனை பார்த்து விட்டு அனைவரும் உங்களின் கருத்துக்களை கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியை புரோமோட் செய்வதற்காக இந்நிகழ்ச்சி பற்றிய டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களிலும் சமூகத்தில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் பற்றி கூறப்பட்டது. ஆனால் தற்போது துவங்க உள்ள 3வது சீசன் முந்தைய இரண்டு சீசன்களிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் மக்களுடன் ஒரு ஆரோக்கியமான விவாதமும் நடத்தப்ட உள்ளதாம்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி ஹீரோயின்களான தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா, கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நடிகைகளுடன் சமூக வலைதளங்களில் அமீர்கான் நடத்தும் நேரடி சாட்டிங்கும் இதில் இடம்பெற உள்ளது.