'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார், இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹேமாமாலினி. தற்போது தனது தொகுதி தொடர்பான பிரச்னைகளை கவனித்து வருவதோடு, தொகுதி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு நடிகையாக, மனைவியாக, தாயாக சிறிது காலம் கடந்தது. என் வாழ்க்கை பயணத்தில் பல்வேறு முகங்கள் கடந்து சென்றுள்ளன, அவை எல்லாமே முக்கியமான ரோல். நான் எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். தொடர்ந்து ஒரு நடிகையாகவும், எம்பி.யாகவும் இருந்தாலும் என் குடும்பத்தின் மீது எப்போதும் கவனம் செலுத்துவேன், குடும்பத்தை விட்டு என்னால் இருக்க முடியாது. என் வாழ்க்கையின் காலைப்பொழுது உடற்பயிற்சி, யோகா மற்றும் பூஜையில் சென்று விடுகிறது. மீதம் இருக்கின்றன நேரத்தில் எனது குடும்பத்தையும், அரசியலையும் கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.