பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சாதனையாளர்கள், சமூக விழிப்புணர்வு சார்ந்த படங்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு அவற்றிற்கு வரி விலக்க அளித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சர்தானி, மேரி கோம் ஆகிய படங்கள் வரிவிலக்கு பெற்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ரோர்-டைகர்ஸ் ஆப் சுந்தர்பன்ஸ் படமும் சேர உள்ளது.
புலிகள் வேட்டையாடப்படுவது மற்றும் சுந்தரவன காடுகள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இந்த படத்தில் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. கோபம் கொண்ட புலிகள் சுந்தரவனக் காடுகளைச் சுற்றி வசிக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்றன. அதனால் அந்த கிராம வாசிகள் அந்த புலிகளை வேட்டையாட தயாராகிறார்கள். அந்த புலிகள் கொல்லப்படுகின்றனவா? அந்த மக்கள் புலிகளிடம் இருந்து தங்களை எப்படி காத்துக் கொள்கின்றனர்? மக்கள் தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்காக புலிகளை கொல்வது அவசியமா? என்பதை விளக்குவது தான், ரோர்ஸ்-டைகர்ஸ் ஆப் சுந்தபன்ஸ் படத்தின் கதை.
இது ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய படம் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தியர்கள் அனைவரையும் இந்த படத்தை பார்க்கச் செய்வதற்காக ஊக்கப்படுத்தும் வகையில் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளை பாதுகாப்பது மற்றும் வனங்களை பாதுகாப்பதை வலியுறுத்துவதற்காக இந்த கோரிக்கையை அரசு ஏற்று, வரி விலக்கு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.