இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். இந்த கொடுமையை பெண்களால் தடுத்து நிறுத்த முடியாது; ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் தடுக்க முடியும், என, பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை, மல்லிகா ஷெராவத், ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது தகவல் துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியா சார்பில் சிலர் பங்கேற்றனர். இவர்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற ரீதியில், மல்லிகா ஷெராவத்தும் அந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும், நீதித்துறையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், இந்த கொடூர சம்பவங்கள் குறைந்த பாடில்லை. 20 நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படும் அவலம், அங்கு நடைபெறுகிறது. இதை கடுமையான சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது. கற்பழிப்புகளுக்கு எதிராக, ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் தான் தடுக்க முடியும். ஜாதி பிரச்னை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவையும், இந்த கொடுமைக்கு காரணமாக அமைந்துள்ளன.
குழந்தை திருமணங்களும் அதிக அளவில், இந்தியாவில் நடைபெறுகிறது. ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற போதிலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது; இதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வாறு, நடிகை மல்லிகா ஷெராவத் பேசினார்.