'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடை திறப்பு, கல்யாண விழா இவற்றிற்கு இந்தித் திரையுலக நட்சத்திரங்களை வரவழைப்பது அங்குள்ளவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நடிகைகளை நடனமாட அழைப்பதற்குக் கூட சில பல லட்சங்களை செலவு செய்வார்கள். சினிமாவில் நடிப்பது போக, இப்படிப்பட்ட வருமானங்களும் அவர்களுக்கு அதிகமாகவே வரும். பெரிய நட்சத்திரங்களில் இருந்து சிறிய நட்சத்திரங்கள் வரை பணம் கொடுத்து அழைத்தால் அனைத்து விழாக்களுக்கும் செல்வார்கள்.
சமீபத்தில் சல்மான் கானை ஒரு கல்யாண மண்டபம் திறந்து வைக்க அழைத்த போது அதற்கு 3.5 கோடி ரூபாய் கேட்டாராம். அவருக்கு மட்டும் 3 கோடி ரூபாய், அவருடைய உதவியாளர்கள், பாதுகாவலர்கள் வருவதற்கு 50 லட்சமாம். கல்யாண மண்டபம் திறக்கப்படுவது இங்கல்ல, லண்டன் மாநகரில். அடுத்த மாதம் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சிக்காக இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இரண்டு நாட்களில் அங்கு சென்று வருவதற்கும், ரசிகர்களிடம் கொஞ்ச நேரம் உரையாடுவதற்கும் சல்மான் கேட்ட அந்தத் தொகையைத் தருவதற்கும் அந்த மண்டபத்தைக் கட்டியுள்ள தொழிலதிபர் குடும்பம் தயாராக உள்ளதாம்.
அதன் மூலம் அவர்களும் கொஞ்சம் பிரபலமடையலாம் அல்லவா... !