ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிரித்திக் ரோஷன், தனது மனைவி சூசனாவை விவாகரத்து செய்ய உள்ளது தான் தற்போது பாலிவுட்டின் மிகப் பெரிய டாப்பிக்காக உள்ளது. அது மட்டுமின்றி இந்த தம்பதியின் நெருங்கிய நண்பரான அர்ஜூனுடனான சூசனாவின் நெருங்கிய உறவே இவர்களின் விவாகரத்து காரணம் எனவும் தகவல் பரவியதால் ஹிரித்தக்-சூசனா விவாகரத்தை வைத்து பல சர்ச்சை கருத்துக்களும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹிருத்திக் மனைவி சூசனாவும், அர்ஜூனின் மனைவி மெஹரும் இன்று வரை நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். தங்களை வைத்து கூறப்பட்டு வரும் சர்ச்சை கருத்துக்கள் பற்றிய இது வரை அமைதி காத்து வந்த இருவரும், தற்போது சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக மீடியாக்களை சந்தித்து தங்களின் நிலையை தெளிவுபடுத்தி உள்ளனர்.
பத்திரிக்கை ஒன்றிற்கு சூசனா அளித்த பேட்டியில், நாங்கள் இருவரும் பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை பற்றி புரியாத சிலர் தான் எங்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் எண்ணம் போல் பேசி வருகின்றனர். ஹிருத்திக் உடனான எனது உறவு எப்போதும் போல் இருக்கும். நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி முதலில் நல்ல பெற்றோராக இருப்போம். அது தான் எங்களுக்கு முக்கியம். மெஹரும் அர்ஜூனும் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போன்று நல்ல உறவு உள்ளது என கூறி உள்ளார்.
இதே போன்று மெஹர் அளித்த பேட்டியிலும், சூசனா எனது சகோதரி போன்றவர். எனது அம்மா மற்றும் அர்ஜூனை விடவும் அவருக்கு தான் என்னை பற்றி நன்றாக தெரியும். திரையுலகில் எனது நெருங்கிய தோழியும் அவர் தான் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அவதூறான தகவல்கள் தங்களின் குடும்பத்தை பாதிப்பதாக கூறிய இருவரும், தங்களின் வெளிப்படையான பேட்டி மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். வதந்திகளை முறியடிப்பதுடன் அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் விதமாக சூசன், மெஹர்,அர்ஜூன் ஆகியோர் ஒரே குடும்பமாக இணைந்து இரவு விருந்துகளுக்கும் சென்று வருகின்றனர்.