தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நட்சத்திரங்களிலேயே விலை உயர்ந்த மதிப்பு மிக்க பங்களாவில் குடியேற இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மும்பை கடற்கரையை ஒட்டியுள்ள வெர்சோவா பகுதியில் படப்பிடிப்புக்கு சென்றபோது பிரியங்கா சோப்ராவை அந்த பகுதியில் இருந்த ஒரு பங்களா கவர்ந்துள்ளது. அதைப் பற்றி உதவியாளர்களை விசாரிக்கச் சொன்னார். அது மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது என்றும் அவர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதால் விற்க இருப்பதாகவும் விசாரணையில் தகவல்கள் கிடைத்தது.
பங்களாவை சுற்றிப் பார்த்த பிரியங்கா சோப்ரா விற்பனை ஒப்பந்தம் போட்டுவிட்டார். பங்களாவின் விலை 100 கோடி ரூபாய். 1930ம் ஆண்டு ஆங்கிலேயே பொறியாளர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த பங்களாவில் 15 படுக்கை அறைகள், நான்கு கிச்சன்கள், இரண்டு பார்ட்டி ஹால். மூன்று பார், பின்பகுதியில் சின்ன பூங்கா. முன் பகுதியில் குதிரை லாயம், கார் பார்க்கிங் என பக்காவாக கட்டப்பட்டுள்ளது. பங்களாவை பராமரிக்க மட்டும் 20 பணியாளர்கள் வேண்டுமாம். சினிமா உலகின் ராணி, இனி பங்களா ராணியாக இருக்கிறார்.
"100 கோடி ரூபாயெல்லாம் பிரியங்காவிடம் கிடையாது பங்களாவை வாங்கிக் கொடுத்திருப்பது அவருக்கு நெருக்கமான நடிகர்" என்ற கிசுகிசுவும் ஓடிக் கொண்டிருக்கிறது.