இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாக நடந்து வருகிறார். இப்படி சோகத்தில் இருந்துவரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள 'டெல் இட் லைக் எ உமன்' என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள அப்ளாஸ் என்கிற பாடல் 95 வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், “இந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆஸ்கர் விருதுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. 'டெல் இட் லைக் எ உமன்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. மேலும் இதே பிரிவில் போட்டிக்கு தேர்வாகியுள்ள நாட்டு நாட்டு பாடலின் வெற்றிக்காக ஆர்ஆர்ஆர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.