தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டாப்ஸி நடித்துள்ள இந்திப் படம் துபாரா. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கி உள்ளார். வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டாப்ஸி கலந்து கொண்டு வருகிறார்.
மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு டாப்ஸி தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்குள்ள போட்டோகிராபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாப்ஸி "எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் தாமதாக வந்ததாக எப்படி நீங்கள் கூறலாம்" என்றார். இதனை டாப்ஸி கோபகமாகவும் பேசினார்.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு டாப்ஸியும் கோபமாக பதிளித்தார். சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் பேசிய டாப்ஸி "நான் கேமரா முன்னால் நிற்கிறேன். இதுதான் நாளை வெளியில் வரும், கேமராவுக்கு பின்னால் நிற்கும் உங்கள் செயல்பாடு வெளியில் வராது. நீங்களும் கேமராவுக்கு முன்னால் வந்து பேசுங்கள்" என்றார்.
இதற்கிடையில் விழா ஏற்பாட்டாளர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.