ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் சில சமயங்களில் சில நிகழ்வுகள் முரணாக அமையும். விரைவில் ஆறுச்சாமியாக மீண்டும் தன்னுடைய அவதாரத்தை வெளிப்படுத்த இருக்கும் நாயகன் சிசிடிவி பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதை சென்னை காவல் துறைதான் முன்னெடுத்துள்ளது. இது பற்றிய தகவல் வந்ததும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
சில வாரங்களுக்கு முன்பு அந்த நாயகனின் வாரிசு இரவு நேரத்தில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தினார். மீடியாக்களில் அது பற்றிய செய்தி பரபரப்பாக வெளிவந்தது. அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. ஆனால், சிசிடிவி விழிப்புணர்வு விளம்பரத்தில் நாயகன் நடித்ததையும், அவருடைய மகன் விபத்து ஏற்படுத்தியதையும் இணைத்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நாயகன் அவருடைய மகனுக்கு அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுக்கட்டும் என்கிறார்கள்.