'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். தமிழில் அஜீத் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தை அடுத்து, தற்போது தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த நிலையில், நேற்று காலை ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பவன் கல்யாணின் மனைவி அன்ன லெஸ்னெவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். பவன் தனது குழந்தையை கையில் வைத்தபடி எடுத்துக்கொண்ட போட்டோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.
பவன் கல்யாணுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இப்போது பிறந்துள்ள ஆண் குழந்தையோடு சேர்த்து நான்கு குழந்தைகள் உள்ளனர். பவன் கல்யாணுக்கு அன்ன லெஸ்னொ மூன்றாவது மனைவியாவார். பவன் இதற்கு முன்னர் நந்தினி, ரேணு தேசாயை மணந்து பின்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டார்.