'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசிஷ்டென்ட் டைரக்டராக கோலிவுட்டில் என்ட்ரியான விஷால், செல்லமே படத்தின் மூலம் ஹீரோவானார். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த விஷாலுக்கு, பாலா இயக்கத்தில் நடித்த அவன் இவன் படம் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து அவரது நடிப்பை வெளிக்காட்டும் விதமாக பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் அமைந்தது. தற்போது இவர் நடித்து வெளிவந்துள்ள பூஜை, தீபாவளி திரைவிருந்தாக அவரது ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி :
* இந்த தீபாவளி எப்படி இருக்கு?
ஒவ்வொரு தீபாவளிக்கும் என் படம் வரனும்னு ஆசையிருக்கு. இந்த வருஷம் கூடுதலா உழைக்கிறேன். சின்ன வயசிலே போட்டி போட்டு வெடி வெடிச்ச காலம் உண்டு. இப்போது நிறைய சினிமா பற்றி யோசிக்கிறேன். புதுசு புதுசா எதாச்சும் செய்யனும்கிற ஆர்வம், வேகம் இருக்கு, இந்த தீபாளிவளிக்கு என் பூஜை படம் இதுதான் செய்தி.
* இன்னிக்கு ரிலீஸ் ஆகும் பூஜை படத்தோட ஸ்பெஷல்?
கதை கோவையில் தொடங்கி, பீகாரில் முடியும். காதல், குடும்பம், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று ஒவ்வொன்றையும் ஹரி பிரிச்சி மேஞ்சிருக்கார். பூஜை படத்தை குடும்பத்தோடு பார்க்க வருவாங்க. படத்தை பார்த்துட்டு போகும் போது வாசு மாதிரி பையன், நம்ம குடும்பத்தில் ஒருத்தன் தான் என்ற உணர்வோட போவாங்க. சண்டைக்கோழி, மலைக்கோட்டை போன்ற படங்களில் எனக்கு அந்த உணர்வும், வரவேற்பும் இருந்தது. இப்போது பூஜை படம் மூலம் மீண்டும் தமிழ்நாட்டின் குடும்பங்களுக்குள் நானும் ஒருத்தனா போறேங்கிறது சந்தோஷமா இருக்கு.
* நடிகர் சங்கத்துக்கு நீங்க தனியா ஒரு டீம் அமைத்து செயல்படுற மாதிரி பேச்சு இருக்கே ?
அப்படி எல்லாம் இல்லை. நடிகர் சங்கம்னு மட்டும் இல்லை, எங்க தவறு நடந்தாலும், அங்க போய் முதல் ஆளா நின்னு கேட்பேன். நடிகர் சங்கத்தை பொறுத்த வரை, சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. நானும் என்னோடு சில நடிகர்களும் சேர்ந்து நல்ல விஷயங்கள் செய்ய ஆசைப்படுகிறோம். சந்தானம், ஆர்யா, இப்படி பலரும் இருக்காங்க. கண்டிப்பா நல்லது நடக்கும்னு நம்புறேன்.
* முதலில் திருமணம் யாருக்கு, உங்களுக்கா இல்லை அண்ணன் ஆர்யாவுக்கா?
இப்ப எனக்கு இருக்கும் கமிட்மென்ட் பார்த்தா, அடுத்த வருஷம் கூட என் திருமணம் இருக்காது. ஆனா, அண்ணன் ஆர்யா அடுத்த வருஷம் பாதியில் திருமணம் செய்துக்குவார்னு நம்புறேன்.
* இந்த பத்து வருஷத்தில் நீங்க பார்த்து பயப்படும் ஒரு இயக்குநர் யார்? எந்த இயக்குநரோடு ரொம்ப வசதியா, புரிஞ்சிட்டு வேலை பார்க்க முடியும்னு நினைக்கிறிங்க?
நான் பார்த்து பயப்படும் இயக்குநர் தருண் கோபி. திமிரு படம் பண்ணும் போது அவ்ளோ டென்ஷன்.என்னை புரிந்து கொண்ட இயக்குநர்கள் பாலா சார், திரு, ஹரி சார், சுந்தர் சார். ஹரி சார், இவனுக்கு இதை கொடுத்தா சரியா செய்வானு, என்னை நம்பி கொடுப்பார். சுந்தர்.சி சார், ஆர்ப்பாட்டம் இல்லாம, அலட்டிக்காம, லைட்டா, என்னை வச்சி படம் எடுப்பார். எம்.ஜி.ஆர்., படம் வந்திருந்தால் நிறைய சொல்லியிருப்பேன். ஆனா முடியல.
* நீங்க, வரலஷ்மி, அஞ்சலி நடித்த எம்.ஜி.ஆர் படம் எப்போது ரிலீசாகும்?
அது கடவுளுக்கு கூட தெரியாது. அந்த தயாரிப்பாளருக்கு மட்டும் தான் தெரியும். நிறைய அந்த படம் வெளிவர மெனக்கெட்டேன். ஆனா படம் வெளிவரல என்பது வருத்தம் தான்.
* நீங்களும் ஆர்யாவும் சேர்ந்து ஜீவா படம் தயாரிச்சீங்க, இன்னும் உங்க நண்பர்களுக்குள்ள வேறு எதும் ஐடியா இருக்கா?
முக்கியமா, நடிகர் சங்கத்துக்காக, நான், ஆர்யா, ஜீவா, ரவி, கார்த்தி எல்லாரும் சேர்ந்து இலவசமா, சம்பளம் இல்லாம நடிச்சிக் கொடுக்க திட்டம் இருக்கு. பார்க்கலாம். அதே போல, படங்கள் சேர்ந்து தயாரிப்பது என்பது தானே அமையனும். ஜீவால அமைந்தது பண்ணோம். அடுத்து எப்ப, என்னனு யாருக்கும் தெரியாது.
* சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து நீங்க நடிக்கும் ஆம்பள படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க போல?
ஹன்சிகா எனக்கு ஜோடி. தவிர எனக்கு படத்துல ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என்று 3 அத்தைகள். அவங்க மகள்களா மதுரிமா, மாதவி போன்ற நடிகைகள் இருக்காங்க. சூட்டிங்கே அவ்ளோ கலகலனு திருவிழா மாதிரி இருக்கும். இந்த மாதிரி ஒரு வாய்ப்பு திரும்ப எனக்கு எந்த படத்தில் அமையும்னு தெரியல. சுந்தர் சார் சூட்டிங் ஸ்பாட் அவ்ளோ என்ஜாய் பண்றேன்.
* விஷால், ஹன்சிகா, ஸ்ருதி மாதிரி அழகாக பப்ளி ஹீரோயின்கள் கூட நடிச்சிருக்கிங்க. ஆனா, நீங்க நடிக்க விரும்பும் இல்லை ஆசைப்படும் ஹீரோயின்கள் யார் ?
முதலில் இலியானா கூட நடிக்கனும். அப்புறம் ப்ரணிதி சோப்ரா, சோனம் கபூர் அவ்ளோ தான். ஏன் என்ன காரணம் இவங்கனு எல்லாம் கேக்காதீங்க. எப்பவும் நம்ம கனவு நாயகினு பார்த்தா, பாலிவுட் நடிகைகள் தான் வந்து நிற்கிறாங்க.
* நீங்க ரசித்து நடிக்க விரும்பும் ரோல் எது ?
நான் கதாநாயகனாகவும் நடிச்சிட்டேன். கதாநாயகி யாவும் நடிச்சிட்டேன். முடிந்த வரை சில ரோல்களில் நடிச்சிருக்கேன். ஆனா பக்கா வில்லன் ரோல் பண்ண ஆசை இருக்கு. சில படங்களில் நடிப்பின் மூலமாகவும், சில படங்களில் டையலாக் மூலமாகவும் நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால், முகபாவனை வெளிப்பாடுடன், நம் திறமையை வெளிக்காட்டி நடிக்கும் ஒரு வில்லன் ரோலுக்காக காத்திருக்கேன்.
* இப்ப இருக்கும் நடிகர்களில், நல்ல கதையை தேர்வு செய்து, ரசிகர்களை சம்பாதிக்கும் நடிகர் யார்னு நினைக்கிறிங்க?
இப்ப வந்து இன்டஸ்ட்ரியே கலக்குறது தம்பி சிவகார்த்திகேயன் தான். உண்மையா சொல்லப் போனா அந்த பையன் வளர்ச்சி, எங்களை மாதிரி ஆட்களை தட்டி எழுப்பி விடுற மாதிரி ஒரு அலாரம் அடிக்கிற மாதிரி இருக்கு. அப்புறம் விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு இப்படியான நடிகர்கள் இருக்காங்க. இயக்குநர்கள் நம்மள தான் நடிக்க கூப்பிடுவாங்கனு சாய்ந்து உட்கார முடியாது. இப்ப நடிக்கிறதுக்கு அவங்களுக்கு நிறைய பேர் சாய்ஸ்ல இருக்காங்க.
* உங்க வீட்டில் இருந்து உங்க அண்ணி ஸ்ரேயா ரீ-என்ட்ரி ஆகியிருக்காங்க. அவங்களை பற்றி சொல்லுங்க...?
ஆமாங்க, ரொம்ப வருஷம் கழித்து, தமிழ் இண்டஸ்ட்ரிக்கு நடிக்க வந்திருக்காங்க. "அண்டாவகாணோம்" அப்படினு ஒரு படம். அவங்க தான் படத்தில் மெயின் ரோல். நடிப்பில் அசத்தி எடுத்திருக்காங்களாம். அந்த படத்தை எப்படியாவது, நான் வாங்கனும்னு முயற்சி பண்றேன். முடியல. நான் கேள்விப் பட்டவரை, அது ரொம்ப முக்கியமான படமா, புது களத்தோட வரப்போற படம். ஸ்ரேயாவுக்கு ஒரு இடம் அந்த படம் மூலமா கிடைக்கும்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.